காலை எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது நல்லதா…? எப்போது குடிக்க வேண்டும்…?

November 28, 2022 at 7:33 am
pc
  • பொதுவாக காலை எழுந்ததும் ஒருவர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று பலரும் கூறுவர். அதில், சிலருக்கு குழப்பம் இருக்கும். அந்தக் குழப்பம் என்னவெனில், பல் துலக்கி விட்டு தண்ணீர் குடிக்க வேண்டுமா, இல்லை பல் துலக்காமல் தண்ணீர் குடிக்க வேண்டுமா என்பது தான்.
  • நீங்கள் காலை எழுந்தவுடன் பல் துலக்குவதற்கு முன்பே தண்ணீர் குடிக்கலாம். உண்மையில் இந்த நடைமுறை உங்களுக்கு நன்மையைத் தரும். நீங்கள் இரவில் உறங்கும் போது உடலில் உள்ள நீரை உங்களின் உடல் பயன்படுத்தி விடும்.
  • மேலும், நள்ளிரவில் எழுந்து நீங்கள் தண்ணீர் குடிக்க மாட்டார்கள். அதனால் தான் நீங்கள் காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுவது. அது உங்களை நீரேற்றம் செய்ய உதவும். இரவில் தூங்கும் போது வாயில் உள்ள கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் பெருகும்.
  • பல் துலக்குவதற்கு முன் காலையில் தண்ணீர் குடிப்பதன் மூலம் அது உங்கள் வாயை சுத்தம் செய்ய பல் துலக்குதலை எளிதாக்கும். அதுமட்டுமின்றி, பல் துலக்குவதற்கு முன் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை நீங்கள் ஏற்படுத்திக் கொள்வது, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவடைய செய்யும்.
  • இதனால், இருமல், சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது குறையும். மேலும், பல் துலக்குவதற்கு முன் தண்ணீர் குடித்தால், உயர் இரத்த அழுத்தம் குறையும்.
  • மேலும், இதனால் இரத்த சர்க்கரை அளவும் கட்டுப்படுத்தப்படும். இரைப்பை அழற்சி, அஜீரணம் போன்ற பிரச்சனைகளில் இருந்து நீங்கள் விடுபடலாம்.
  • அதுமட்டுமின்றி, இந்தப் பழக்கத்தால் சருமம் மற்றும் தலைமுடி இரண்டும் மென்மையாகவும், மிருதுவாகவும் மாறும். பல் துலக்கிய உடன் ஏதேனும் சாப்பிட வேண்டும் எனில், அதற்கு நீங்கள் 15-லிருந்து 20 நிமிடங்கள் காத்திருந்து பின்னர் சாப்பிடவும்.
  • காலையில் தண்ணீர் குடிப்பதால் நமக்கு பல நன்மைகள் உள்ளன. இந்தப் பழக்கத்தின் மூலம் நீங்கள் உங்களை நாள் முழுவதும் வலுவாக வைத்திருக்க முடியும். முடிந்தவரை பல் துலக்கிய உடன் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website