குடிபோதையால் மனைவியை அடித்து கொன்றுவிட்டு பிணத்துடன் தூங்கிய கணவன்!

April 21, 2022 at 8:49 am
pc

கடலூரில் மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு உயிரிழந்த உடலுடன் இரவு முழுவதும் தூங்கிய கணவனை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வடக்கு மாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். இவருக்கு தீபா என்ற மனைவியும், ஐந்து மற்றும் 8 வயதில் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கொத்தனார் வேலை செய்யும் இவர் தினந்தோறும் குடிபோதையில் வீட்டிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவி தீபா இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சண்டையிட்டு உள்ளார். அதுபோல் நேற்று இரவும் ஆனந்த் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் தீபாவுக்கு ஆனந்திற்க்கும் சண்டை வந்துள்ளது. 

ஆத்திரமடைந்த ஆனந்த் தீபாவை கட்டையால் அடித்துள்ளார். தீபா அப்படியே விழுந்து மயங்கி உயிரிழந்துள்ளார். போதையிலிருந்த ஆனந்த் மனைவி இறந்ததுகூட தெரியாமல் இரவு முழுவதும் உடல் அருகிலேயே தூங்கியிருக்கிறார். அவரது 5 வயது மற்றும் 8 வயது குழந்தைகளும் இது தெரியாமல் இருந்துள்ளன. எப்போதும் காலையிலேயே திறந்திருக்கும் வீடு இன்று காலை நீண்ட நேரமாகியும் திறக்காததால் அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்திருக்கின்றனர். அப்போது தீபா உயிரியிழந்து கிடந்ததையும், அருகில் ஆனந்த் தூங்கி கொண்டிருந்ததையும் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே அண்ணாமலை நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து அண்ணாமலை நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆனந்தை கைது செய்தனர். தந்தையின் குடிப்பழக்கத்தால் தந்தையும் தாயையும் இழந்து இரண்டு குழந்தைகள் அநாதையாகி உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website