குடிப்பதற்கு சிறுநீர் கேட்ட ரச்சிதா!!மரணமா கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
மகாராணி வேடத்தில் இருக்கும் ரச்சிதா தூய தமிழில் பேசி பார்வையாளர்களிடம் வசமாக மாட்டிக் கொண்டிருக்கிறார்.
குடிப்பதற்கு சிறுநீர் கேட்ட ரச்சிதா மகாலட்சுமியை சமூக வலைதளவாசிகள் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
பிக் பாஸ் 6 வீட்டை ராயல் மியூசியமாக மாற்றிவிட்டார்கள். ராபர்ட் மாஸ்டர் ராஜாவாகவும், ரச்சிதா மகாலட்சுமி ராணியாகவும் இருக்கிறார்கள். ராஜா, ராணி வேடத்தில் இருப்பதால் தூய தமிழில் பேசுகிறார்களாம். இந்நிலையில் மன்னா எனக்கு சிறுநீர் வேண்டும் என்று கூறுங்கள் என ராபர்ட் மாஸ்டரிடம் தெரிவித்தார் ரச்சிதா.
ராபர்ட்
சிறுநீரா என்று கேட்டுவிட்டு கிளம்பினார் ராபர்ட். குடிநீரை தான் ரச்சிதா சிறுநீர் என்று சொல்ல அது கூட தெரியாமல் ராபர்ட் மாஸ்டர் சிறுநீர் எடுத்து வர சென்றுவிட்டார். தமிழ் செத்துவிடும். இப்படி தமிழ் பேசும் ராஜா, ராணியால் நாடு வெளங்கிவிடும் என்று சமூக வலைதளவாசிகள் கிண்டல் செய்கிறார்கள்.
பாத்ரூம்
சிறுநீரா என்ன கருமத்தமா கேட்குற. யோவ் ராபர்ட் மாஸ்டர், சிறுநீரை எடுத்து வர பாத்ரூமுக்கா செல்கிறீர். உங்களின் தமிழில் தீயை வைக்க என்று பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.