குடும்பத் தகராறு – அண்ணனை கடப்பாரையால் ஒரே அடி அடித்து கொன்ற தம்பி.
மயிலாடுதுறை: சித்தர்காடு பகுதியை சேர்ந்தவர் குமார் (44). இவருக்கும் இவரது தம்பி வீராச்சாமிக்கும் (41) ஏற்கனவே குடும்பத் தகராறு காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், இருவரும் வினோத் என்பவருடன் சேர்ந்து நேற்றிரவு மது அருந்தியுள்ளனர். அப்போது குமார், வீராச்சாமி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், மதுபோதையில் இருந்த வீராச்சாமி தனது அண்ணன் குமாரை கடப்பாறையால் தலையில் தாக்கியதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். பின்னர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.