குரங்கு அம்மைக்கு இந்தியாவில் முதல் மரணம்- பீதியில் மக்கள்!
கேரளாவில் குரங்கு அம்மை அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் 75 நாடுகளில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குரங்கு அம்மை நோய்க்கு இதுவரை கேரளாவில் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருமே வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள். இந்நிலையில் கேரளாவில் குரங்கு அம்மை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நபர் நேற்று உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் குரங்கு ஏற்பட்ட முதல் உயிரிழப்பு இதுதான். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த குருவாயூர் பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞர் கடந்த 27ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குரங்கு அம்மை நோய் தொற்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கேரள அரசு தெரிவித்துள்ளது. குரங்கு அம்மை நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி வருவதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.