குளிப்பதற்கு சோப் கூட வாங்கித்தரமாட்டார்…டிக் டாக் இலக்கியாவின் தனிப்பட்ட வாழ்க்கை!!

February 22, 2023 at 2:28 pm
pc

டிக் டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கிளாமரான வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் டிக் டாக் இலக்கியா சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய இளமைக்கால கஷ்டங்களை பதிவு செய்திருக்கிறார். இவர் கூறியுள்ள இந்த விஷயம் ரசிகர்களை அதிர்ச்சியால் இருக்கிறது. எனக்கு நான் மூன்றாவது வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுது என்னுடைய தாய் மரணம் அடைந்து விட்டார்.

அதன் பிறகு எங்கள் குடும்பத்தில் அருமையான சூழல் நிலவியது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுது என்னுடைய தந்தை யாரும் எதிர்பார்க்காத வண்ணம் இன்னொரு திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணம் தான் எங்களுடைய அனைத்து பிரச்சனைக்கும் காரணமாக அமைந்து விட்டது. பள்ளியில் படிக்கும் பொழுது பல பிரச்சினைகளுக்கு நான் ஆளானேன்.

எனக்குள் ஒரு குற்ற உணர்ச்சி தோன்றியது. எல்லோரும் படிக்கிறார்கள் எல்லோரும் அது வைத்திருக்கிறார்கள் இது வைத்திருக்கிறார்கள் ஆனால் என்னுடைய அப்பா எங்களுக்கு குளிப்பதற்கு சோப் கூட வாங்கி தர மாட்டார்.

அப்படி ஒரு ஏழ்மையான சூழலில் இருந்தேன். மறுபக்கம் எனக்கு படிப்பும் சுத்தமாக வரவில்லை. என்னுடைய கவனம் எல்லாம் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நான் மட்டும் ஏன் இப்படி இருக்கிறோம் என்று ஒரு திசையில் தான் சென்றது.

எனவே எனக்கு படிப்பு சுத்தமாக வரவில்லை. வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று திருப்பூரில் சில மாதங்கள் வேலை செய்து அதன் பிறகு அந்த சம்பளமும் எனக்கு கட்டுபடியாகவில்லை இதே வேலையை சென்னையில் செய்தால் அதிக பணம் கிடைக்கும் என்று சென்னைக்கு வந்தேன்.

அப்போது வேலை கொண்டு தேடிக் கொண்டிருக்கும் நேரத்துக்கு இடையில் கிடைக்கும் நேரத்தில் டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட ஆரம்பித்தேன்.

அதன் மூலம் எனக்கு நிறைய லைக்குகள் கிடைத்தது. அதனால், அதிலேயே தொடர்ந்து பயணித்து தற்பொழுது சினிமாவிலும் நடித்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார். இவருடைய இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website