குளியறையில் சடலமாகக் கிடந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர்!! அதிர்ச்சியில் திரை உலகம்..
பிரபல ஆடை வடிவமைப்பாளர் பிரத்யுஷா கரிமெல்லா வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாராஹில்ஸ் ஃபேஷன் ஸ்டுடியோவை நடத்தி வந்த பிரத்யுஷா கரிமெல்லா, தெலுங்கு சினிமாவில் பல பிரபலங்களுக்கும், பாலிவுட்டில் சில நடிகர்-நடிகைகளுக்கும் ஆடை வடிவமைப்பாளராகப் பணி புரிந்துள்ளார்.
ஆடை வடிவமைப்பாளர் பணியில் அதிகம் வருமானம் ஈட்டும் ஒருவராக பிரித்யுஷா இருந்தார், இவரின் சொத்து மதிப்பு மட்டும் 5 மில்லியன் டொலர்கள் வரை இருக்கும் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குளியலறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். உடனடியாக அவரது பெற்றோர் மற்றும் பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
பிரித்யுஷா அறையில் இருந்து கார்பன் மோனாக்சைடு சிலிண்டரை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். பிரத்யுஷா மரணம் சந்தேக மரணமாக பொலிசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவரின் சடலம் ஓஸ்மேனியா மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.