குழந்தைகளுக்கு பிடித்த குர்குரே வீட்டிலே ஈஸியா செய்யலாம் வாங்க …!!
தேவையானபொருட்கள்
வெள்ளை சோளம் & 4 கப்,
பெரிய ஜவ்வரிசி & 1 கப்,
பொட்டுக்கடலை & 4 டீஸ்பூன்,
வெண்ணெய் &
ஒரு சிறிய எலுமிச்சை அளவு,
உப்பு & சுவைக்கேற்ப,
மிளகாய்தூள் & 1 டீஸ்பூன்,
மிளகுதூள் & அரை டீஸ்பூன்,
சாட் மசாலா தூள் & 2 டீஸ்பூன்,
நெய் & 1 டீஸ்பூன்,
ரீஃபைண்ட் எண்ணெய் & பொரிக்க தேவையான அளவு.
செய்முறை
வாணலியைக் காயவைத்து ஜவ்வரிசியை போட்டு வறுக்கவும்.
தட்டினால் பொடியும் அளவுக்கு, நிறம் மாறாமல் வறுக்கவும்.
அத்துடன் சோளத்தையும் பொட்டுக் கடலையையும் சேர்த்து, மிஷினில் கொடுத்து அரைத்து, சலித்து ஆறடவும்.
ஆறிய மாவுடன் வெண்ணெய் சேர்த்து, நன்கு பிசறிய பிறகு, மிளகாய்தூள், உப்பு, மிளகுதூள், சாட் மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்து, முறுக்கு மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
எண்ணெய் அளவாகக் காய்ந்ததும், பெரிய கண் தேன்குழல் அச்சில் போட்டு, எண்ணெயில் பிழிந்து விடவும். சீக்கிரமாக, மொறுமொறுப்பாக வெந்துவிடும்.
துண்டுகளாக்கி, துளி நெய்யை உருக்கி மேலாக விட்டு, நன்கு குலுக்கிவிடவும்.
வாயில் போட்டால் கரையும் பிரமாதமான குர்குரே இது.
வீட்டிலேயே செய்த நிறைவும் கிடைக்கும்.
குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கும் நல்லது.