குழந்தைகளை கொன்றுவிட்டு பெற்றோர் தூக்கிட்டு தற்கொலை..!

May 6, 2022 at 3:47 pm
pc

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஜிதேந்திரா (38), சவிதா (35) தம்பதி. இவர்களுக்கு 10 வயதிற்கு உட்பட்ட மகன் மற்றும் மகள் என இரு குழந்தைகள் இருந்தனர். நேற்று முன் தினம் கன்கீர் மாவட்டத்தின் புதிய பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள லாட்ஜில் ஜிதேந்திரா தனது மனைவி மற்ற குழந்தைகளுடன் அறை எடுத்து தங்கியுள்ளனர். 

நேற்று காலை நீண்டநேரமாகியும் அவர்கள் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த லாட்ஜ் ஊழியர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உள்பக்கமாக பூட்டி இருந்த அறையின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். 

அங்கு கணவன் – மனைவி இருவரும் அறையில் உள்ள பேனில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், அறையில் உள்ள படுக்கையில் குழந்தைகள் இருவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிரிழந்து கிடத்ததை கண்டு அதிர்ந்தனர். 

குழந்தைகள் இருவருக்கும் விஷத்தை கொடுத்துவிட்டு ஜிதேந்திரா மற்றும் அவரது மனைவி சவிதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதனை தொடர்ந்து 4 பேரின் உடலையும் கைப்பற்றிய போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website