குழந்தைகளை கொன்று பிரிட்ஜில் வைத்த தாய்!
தென்கொரியாவில் பெண் ஒருவர் தனது இரட்டை குழந்தைகளை கொன்று உடலை குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரட்டை பெண் குழந்தைகள் பிரசவித்ததாக மருத்துவமனைகளில் பதிவுகள் உள்ளன, ஆனால் அவர்களின் பெயர்கள் மற்றும் முகவரி இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறை அதிகாரிகள் விசாரித்ததில் விஷயம் தெரிய வந்தது. அந்த பெண் வீட்டில் குளிர்சாதனப் பெட்டியில் இருந்து இரட்டை குழந்தைகளின் உடல்களை போலீஸார் கண்டெடுத்தனர். குடும்பத்தில் பணப்பிரச்சினையால் குழந்தைகளை கொலை செய்ததாக தாய் கூறியதை தொடர்ந்து ஜூன் 21 ஆம் தேதி போலீசார் அவரை கைது செய்தனர்.