குழந்தைகள் கேட்டு கேட்டு சாப்பிடும் கேழ்வரகு பக்கோடா செய்வது எப்படி..?

தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு – 100 கிராம்
அரிசி மாவு – ஒரு டீஸ்பூன்
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 1
இஞ்சி – சிறிய துண்டு
தயிர் – ஒரு டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் கேழ்வரகு பக்கோடாவிற்கு தேவையான வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலையை என்பவற்றை பொடியாக்காக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
தொடர்ந்து ஒரு பவுலில் கேழ்வரகு மா, அரிசி மாவு, தயிர் மற்றும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி , இஞ்சி – கறிவேப்பிலை என்வற்றை ஒன்றாக சேர்த்து பினைய வேண்டும். அதில் தேவையானளவு உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அதனை 5 நிமிடங்கள் சூடாக விட்டு, எண்ணெயில் பக்கோடா மாவை சிறிய துண்டுகளாக கிள்ளிப் போட்டு பொறித்தெடுக்க வேண்டும். இப்போது மிகவும் சுவையான சத்தான கேழ்வரகு பக்கோடா தயார்.