குழந்தைகள் விரும்பி சாப்பிடும் காளான் மஞ்சூரியன் இப்படி செய்து அசத்துங்க …!!
தேவையானபொருட்கள்:-
பட்டன் காளான் – 500 கிராம்
இஞ்சி, பு ண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூ ன்
சோள மாவு – 6 டேபிள் ஸ்பூன்
மைதா – 3 டேபிள் ஸ்பூ ன்
சோயா சாஸ் – 2 டீஸ்பூ ன்
உப்பு – தேவையான அளவு
வெங்காயம் – 2
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 3
சில்லி சாஸ் – 2 டீஸ்பூ ன்
தக்காளி சாஸ் – 2 டேபிள் ஸ்பூ ன்
செய்முறை:-
முதலில் வெங்காயம், பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ள வேண்டும். பின்னர் காளானை நன்கு கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின் காளானை ஒரு துணியின் மேல் நீர் உறிஞ்சுமாறு வைக்க வேண்டும்.
பிறகு ஒரு கிண்ணத்தில் சோள மாவு, மைதா, சிறிதளவு இஞ்சி, பூண்டு பேஸ்ட், சோயா சாஸ், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து ஓரளவு கெட்டியான பதத்தில் கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் கழுவி வைத்துள்ள காளானை, அந்த கலவையில் போட்டு பிரட்டிக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அந்த காளானைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்பு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, மீதமுள்ள இஞ்சி,
பூண்டு பேஸ்ட், வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்க வேண்டும். பின் அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், சில்லி சாஸ், தேவையான அளவு உப்பு மற்றும் பொரித்து வைத்துள்ள காளான் துண்டுகளை போட்டு நன்கு கிளறி இறக்கினால், குழந்தைகள் விரும்பும் சுவையான காளான் மஞ்சூரியன் தயார்