குழந்தையின் வாயில் கஞ்சா சுருட்டை வைத்து வலுக்கட்டாயமாக புகைக்க வைத்த நபர்!

January 12, 2023 at 6:57 am
pc

நைஜிரியாவில் பச்சிளம் குழந்தையின் வாயில் கஞ்சா சுருட்டை வைத்து வலுக்கட்டாயமாக புகைக்கவைத்த நபரை பொலிஸார் வலைவீசி தேடிவருகின்றனர். இணையத்தில் வைரலாகிவரும் வீடியோவில், நைஜீரியா நாட்டைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பெண் குழந்தை ஒன்றை மடியில் படுக்கவைத்துக்கொண்டு, கஞ்சாவை புகைக்கிறார்.

ஒவ்வொரு முறை அவர் புகைத்த பின்னர், அந்த சுருட்டை குழந்தையின் வாயில் வலுக்கட்டாயமாக திணிக்கிறார். அது என்னவென்றே அறியாத அந்த பச்சிளம் குழந்தை, அதன் வாயில் வைத்ததும் சுருட்டை புகைக்கிறது.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. அந்த நபரின் பைத்தியக்காரத்தனமான செயலால் ஆத்திரமடைந்த நைஜீரியர்கள் ட்விட்டரில் கொந்தளித்தனர்.

நைஜீரியா பொலிஸ் படை, தேசிய போதைப்பொருள் சட்ட அமலாக்க நிறுவனம் மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகளை டேக் செய்து, வீடியோவில் உள்ள நபரைக் கைது செய்யக் கோரினர்.

தகவல்களின்படி, நைஜீரியா முழுவதும் உள்ள பல பொலிஸாருக்கு, வீடியோவில் காணப்படும் அந்த நபரைக் கண்காணிக்கவும், அவரைத் தண்டிக்கவும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளன.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website