குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் நடிகை அபிராமி – குவியும் வாழ்த்துக்கள்!

May 15, 2023 at 2:20 pm
pc

‘விருமாண்டி’ பட நடிகை அபிராமி குழந்தை ஒன்றை தத்தெடுத்துள்ளதாக அன்னையர் தினமான நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.


தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் அபிராமி. இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு குட் நியூஸ் ஒன்றை அளித்துள்ளார். அதாவது பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து உள்ளதாக தெரிவித்துள்ளார் அபிராமி.


தமிழ் சினிமாவில் மிடில் கிளாஸ் மாதவன், சமுத்திரம், சார்லி சாப்ளின் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் அபிராமி. குறிப்பாக இவர் கமல் ஜோடியாக நடித்த ‘விருமாண்டி’ படத்தை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. இந்தப்படத்தில் தனது திமிரான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்திருந்தார் அபிராமி.

தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சினிமாவிற்கு கேப் விட்டார். நீன இடைவேளைக்கு பிறகு மாதவனின் ‘மாறா’ படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அபிராமி கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இவர் நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தானும் தன்னுடைய கணவர் ராகுலும் பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வருவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அபிராமி பகிர்ந்துள்ள பதிவில், ‘நண்பர்களே நானும் ராகுலும் இதனை அறிவிப்பதில் சிலிர்க்கிறோம்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website