குழந்தை இல்லாததால் மனைவியை சீரழிக்கவிட்டு கணவனே வீடியோ எடுத்த அவலம்!

July 10, 2022 at 5:07 am
pc

மத்திய பிரதேசத்தில் உள்ள போபால் மாவட்டத்தில் உள்ள குங்கா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

21 வயதான சஜாபூரில் வசித்து வந்தார், திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை.

இந்தநிலையில், கடந்த ஜூலை 21-ஆம் திகதி அவரது கணவர், ஒரு சாமியாரை நேரில் சென்று பார்த்து அவரிடம் பிரச்சினையை கூறினால், நமக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறி, தனது மனைவியை, குங்கா – கடம்பூரில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

துணைக்கு தனது சகோதரனையும் (24) அழைத்துச் சென்றுள்ளார். ஓரிரு தினங்கள் அங்கு தங்கியிருந்த நிலையில், அந்த சாமியார் வீட்டிற்கே வந்து பூஜை செய்வார் என கூறியுள்ளார்.

இதனை நம்பிக்கொண்டு அப்பெண் இருந்த நிலையில், அப்பெண், அவரது கணவர் மற்றும் அவரது சகோதரர் வீட்டிற்குள் பேசிக்கொண்டு இருந்த நிலையில், வீட்டின் வெளிப்புறமாக தாழ்ப்பாழ் போடப்பட்டுள்ளது.

பின்னர், கணவனே சகோதரன் தனது மனைவியை கற்பழிக்க உதவி செய்துள்ளார். எல்லாம் ஒரு குழந்தைக்காகத் தான் என கூறிக்கொண்டு அங்கு நடப்பதை கணவன் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

ஜூலை 26-ஆம் திகதி விட்டிற்கு திரும்பியவுடன், நடந்ததை அப்பெண் தனது மாமியாரிடம் கூறியுள்ளார். அதற்கு ஒரு பதற்றமும் இன்றி, இதை வெளியே யாரிடமாவது சொன்னால், வீட்டை விட்டு துரத்திவிடுவோம் என பாதிக்கப்பட்ட பெண்ணையே மிரட்டியபோது தான் தெரிந்தது, குடும்பமே இதனை திட்டமிட்டு செய்துள்ளது என்று..,

பின்னர், அப்பெண் ஒருவழியாக தனது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, தனக்கு நடந்த கொடுமையை கூறி கதறியுள்ளார். அதன்பிறகு ஜுலே 31-ஆம் திகதி அப்பெண்ணின் உறவினர்கள் பொலிஸில் புகார் அளித்தனர்.

இந்நிலையில், குங்கா பொலிஸார் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், அவரது தாய் மற்றும் சகோதரர் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website