குழந்தை வேண்டி சிறுவனை கொன்று ரத்தம் குடித்த கொடூர பெண்!

November 26, 2022 at 9:30 pm
pc

உத்தரபிரதேச மாநிலம் பரேலியை அடுத்த ஜமுக்கா கிராமத்தை சேர்ந்த 33 வயதுடைய பெண்ணுக்கு திருமணமாகி குழந்தை இல்லை. அதனால், அவர் அப்பகுதியில் உள்ள மந்திரவாதி ஒருவரை சந்தித்து தனது குறையை கூறினார். அந்த மந்திரவாதி, ‘குழந்தை பாக்கியம் வேண்டும் என்றால் சிறுவன் ஒருவனின் ரத்தத்தை முகத்தில் பூசி கொள்வதோடு, அதனை குடிக்கவும் வேண்டும்’ என்று கூறினார். அவரது பேச்சை நம்பிய அந்தப் பெண், பக்கத்து வீட்டில் வசித்தவரின் 10 வயது சிறுவனை கொன்று அவனது ரத்தத்தை குடிக்க திட்டமிட்டார். அதற்காக அந்த சிறுவனை கடத்திக் கொன்றார்.

பின்னர் அந்த சிறுவனின் ரத்தத்தை உடலிலும், முகத்திலும் பூசியதோடு, அதனை குடிக்கவும் செய்தார். இந்த சம்பவம் கடந்த 2017ல் நடந்தது. இதுகுறித்து பரேலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இவ்வழக்கு பரேலி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுவனை கொன்று ரத்தம் குடித்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website