குவியும் நெகட்டிவ் கமெண்டுகள்… கண்ணீரில் நீயா நானா சீனிராஜாவின் மனைவி!

September 14, 2022 at 2:48 pm
pc

கடந்த வாரம் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் சீனி ராஜா தம்பதி. கணவரை விட அதிகம் சம்பாதிக்கும் மனைவிகள் என்ற தலைப்பில் இவர்கள் பங்கேற்றனர். 

அப்போது சீனி ராஜாவின் மனைவி அவரை ரொம்பவே ஏளமாக பேசினார். அவர் படிக்காதவர், சோம்பேறித்தனமாக இருக்கிறார் என்று கூறினார். மேலும் தனது மகளின் மார்க் ஷீட்டை ஒரு மணி நேரம் பார்த்துக் கொண்டே இருப்பார் என்றும் தான் கையெழுத்து போட்டால் ஃபீல் பண்ணுவார் என்றும் கூறினார்.

ஆனால் தான் வாங்காத மார்க்கை தனது மகள் வாங்குவதை பார்த்து பார்த்து சந்தோஷப்படுவேன் என்று கூறி அனைவரையும் கலங்க வைத்தார் சீனி ராஜா. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் சீனி ராஜாவின் மனைவியை கன்னாபின்னாவென திட்டி தீர்த்தனர். 

சமூக வலைதளங்களில் அவரை விமர்சித்து கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு சீனி ராஜா தம்பதி பேட்டியளித்துள்ளனர். அப்போது பேசிய சீனி ராஜாவின் மனைவி, கமெண்டுகள் வருவதை பார்த்து முதலில் ஆர்வமாக இருந்தது. 
இதுவும் அப்படி ஆயிடுமோ… பயத்தில் மகாலக்ஷ்மி!

பின்னர் நெகட்டிவ் கமெண்டுகள் அதிகம் வருவதால் அழுகை வருகிறது. நாங்கள் இப்படிதான் இருப்போம் நீங்கள் நிகழ்ச்சியாக இதை பார்ப்பதால் உங்களுக்கு வித்தியாசமாக தெரிகிறது என்றார் வேதனையுடன். ஆனால் தனக்கு ஆகும் மருத்துவ செலவை கூட தனது மனைவிதான் பார்த்து கொள்கிறார் என கூறியுள்ள சீனி ராஜா தாங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வருவதாக தெரிவி

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website