கூட்டு பாலியல் வன்புணர்வு : சிறுமியை 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற கொடூரம்
உத்தரபிரதேச மாநிலம் மாவ் பகுதியை சேர்ந்த சிறுமி ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டை விட்டு ஓடிவிட்டார். உத்தரபிரதேசத்தில் இருந்து பீகாரில் உள்ள ஜெய்நகருக்கு வந்தார். ஜெய்நகரில் உள்ள ஒரு சந்தைக்கு வந்த சிறுமி, அங்குள்ள ஒருவரிடம் வழி கேட்டாள். அப்போது அர்ஜூன் யாதவ் என்பவர் சிறுமியை கடத்தி மறைத்து வைத்துள்ளார்.
மேலும் மூன்று நண்பர்களை வரவழைத்து சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளார். அதன்பிறகு, பாதிக்கப்பட்ட பெண்ணை மட்டுமின்றி பலரை பலரையும் அந்த வன்புணர அனுமதித்துள்ளார். அவர்களில், காவல்துறை அதிகாரியும் ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. சிறுமி காணாமல் போனதை அடுத்து, அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பின்னர் உத்தரபிரதேச போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமி பீகாருக்கு சென்றது தெரியவந்தது. இதையடுத்து ஜெய்நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஜெய்நகர் போலீசார் பாலியல் தொழிலாளி சோனி தேவியின் வீட்டையும் சோதனை செய்து அங்கு சிறுமியை கண்டுபிடித்தனர்.
சிறுமியை மீட்ட போலீசார் சோனிதேவியை கைது செய்தனர். அப்போது சிறுமியை கடத்திய முதல் நபர் அர்ஜூன் யாதவ் மற்றும் எலக்ட்ரீஷியன் சாஜன் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடத்தல்காரன் அர்ஜுன் யாதவ், ஜெய்நகர் சந்தையில் இரவு காவலராக இருந்தார். “பாதிக்கப்பட்ட சிறுமியை போலீசார் உட்பட பலர் பாலியல் வன்கொடுமை செய்தனர்” என்று போலீசார் தெரிவித்தனர்.
கடத்தல்காரர்கள் சிறுமியை சோனி தேவிக்கு 50 ரூபாய்க்கு விற்றுள்ளனர்.மேலும், இந்த வழக்கில் ஜெய்நகர் கான்ஸ்டபிள் ராம்ஜீவன் பாஸ்வான் என்பவர் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.