கேரள நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 தமிழர்கள் பலி! 188 பேர் பலி, 225 பேர் மாயம்..

July 31, 2024 at 8:34 pm
pc

கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் தமிழர்கள் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்திய மாநிலம் கேரளாவின் முக்கிய பகுதியான வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவின் பாதிப்பு தேசத்தையே உலுக்கியுள்ளது.

100க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கி பலியான நிலையில் தற்போது 163ஆக இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 

மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தமிழர்கள் 6 பேர் உயிரிழந்ததாகவும், இதன்மூலம் வயநாட்டில் பலியான தமிழர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

காளிதாஸ், கல்யாண குமார், ஷிஹாப் ஆகியோரின் உடல்கள் முன்னதாக மீட்கப்பட்டது. இந்த நிலையில், முதல்வர் பினராயி விஜயன் பாதிப்பு மற்றும் மீட்புப்பணிகள் குறித்து அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.   

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website