கேரள நிலச்சரி-20 லட்சம் நிதிஉதவி செய்த நடிகர் விக்ரம்..

கேரள நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் விக்ரம் 20 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
வயநாட்டில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவிற்கு பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தற்போது வரை 188 பேர் பலியாகியுள்ளதாகவும், 225 பேர் மாயமாகியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இதுவரை உயிரிழந்தவர்களில் 89 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், நேற்றைய தினம் 32 பேரின் உடல்கள் அவரவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மீட்புப்பணிகள் ஒருபுறம் நடைபெறும் நிலையில் அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் நிவாரணம் அறிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் விக்ரம் நிவாரணம் வழங்கியுள்ளார். அவர் நிலச்சரிவு மீட்பு பணிக்காக முதல்வர் பொதுநிவாரண நிதிக்கு ரூ.20 லட்சம் வழங்கியுள்ளார்.