கேள்வி கேட்ட ஆசிரியர்…மாரடைப்பில் உயிரிழந்த ஏழாம் வகுப்பு பள்ளி மாணவி: ஆந்திராவில் பரபரப்பு!

September 8, 2022 at 5:34 pm
pc

ஆந்திராவில் ஏழாம் வகுப்பு பள்ளி மாணவி மாரடைப்பால் உயிரிழப்பு.

ஆசிரியரின் கேள்விக்கு பதிலளித்து கொண்டு இருக்கும் போதே மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஆசிரியரின் கேள்விக்கு பதிலளித்து கொண்டு இருந்த ஏழாம் வகுப்பு மாணவி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

பொதுவாகவே மாரடைப்பு என்பது ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என 60 வயதை கடந்த முதியவர்களுக்கு ஏற்பட்டு வந்தது.

ஆனால் தற்போது உள்ள அதிநவீன மற்றும் வேகமான வாழ்க்கை சூழ்நிலையில் வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் மாரடைப்பு ஏற்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்தியாவின் ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்த சேக் சஜிதா என்ற ஏழாம் வகுப்பு மாணவி, ஆசிரியரின் கேள்விக்கு பதிலளித்து கொண்டு இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நெல்லூர் மாவட்டம் விஞ்சமூரில் ஜில்லா பரிஷத் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் சேக் சஜிதாவிடம் பாடம் தொடர்பான சில கேள்விகளை  ஆசிரியர் எழுப்பியுள்ளார்.

அப்போது அதற்கு பதிலளித்து கொண்டு இருந்த சஜிதா திடீரென நெஞ்சை பிடித்துக்கொண்டு மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைக் கண்ட ஆசிரியர் மற்றும் மாணவர்கள் சேக் சஜிதாவை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஆனால் மாணவி சேக் சஜிதா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததை தொடர்ந்து இந்த செய்தி அப்பகுதி முழுவதும் வேகமாக பரவியது

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website