கொடை உள்ளம் கொண்டவர்-லெஜண்ட் சரவணன்!!24 மணி நேரமும் அன்ன தானம்..

October 6, 2022 at 4:20 pm
pc

சரவணா ஸ்டோர்” குழுவில் ஒருவரான லெஜண்ட் சரவணன், தனது சொந்த கடை விளம்பரத்தில் ஆட்டம்பாட்டமாக தோன்றி முன்னணி நடிகரை மிஞ்சும் அளவிற்கு பிரபலம் அடைந்தார். அவரது விளம்பரம் சில விமர்சனங்களைப் பெற்றது, ஆனால் அவர் தொடர்ந்து விளம்பரங்களில் தோன்றி ரசிகர்களின் இதயங்களில் அவருக்கு ஒரு இடத்தைப் பெற்றார்.

இதன் மூலம் கிடைத்த புகழின் அடிப்படையில் விளம்பர இயக்கத்திற்கு பொறுப்பாக இருந்த ஜேடி-ஜெர்ரி ஜோடியின் இயக்கத்தில் “தி லெஜண்ட்” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.

சமீபத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும்… படத்தின் கதைக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளது.ஒரு சிறு கேப் எடுத்துக்கொண்டு, மீண்டும் தரமான படத்தில் தன்னுடைய மாஸ் என்றியை கொடுப்பார் என கூறப்படுகிறது.

சமூக வலைதளங்களில் ஹீரோவாக அறிமுகமாகி… சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் லெஜண்ட் சரவணன் தற்போது பல புகைப்படங்களை வெளியிட்டு தொடர்ந்து பாராட்டுகளை பெற்று வருகிறார்.

எனவே, லெஜண்ட் சரவணன் வீடு போல், திருநெல்வேலியில் அவர் கட்டிய வீடு, 24 மணி நேரமும் மக்களுக்கு உணவளிக்கிறது.

மற்றொரு பதிவில், “என்னை நேசிப்பவர்களுக்கு என் வீடு என்றென்றும் திறந்திருக்கும்” என்று கூறியிருந்தார்.

மேலும் பலர் இந்த மனசு யாருக்கு வரும் என தெரிவித்து வருவதோடு… இதுவரை ஒரு தொழிலதிபர், தயாரிப்பாளர், நடிகர் என்பதை தாண்டி… கொடை உள்ளம் கொண்டவர் என்றும் நிரூபித்து விட்டார் என தெரிவித்து வருகிறார்கள்.

அவர் தனது கிராமத்தில் விஜயதசமி அன்று கோவிலில் நடக்கும் சில சிறப்பு புகைப்படங்களையும் பதிவிட்டு, அந்த புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website