கொரோனாவுக்கு அடுத்து மிரட்டும் “marburg” வைரஸ்..அசைவ உணவுப்பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை!

July 20, 2022 at 11:09 am
pc

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிரட்டும் marburg வைரஸ் வவ்வால் போன்ற விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவும் எனக் கண்டறியப்பட்டிருக்கிறது. ஆப்பிரிக்காவிலுள்ள கானாவில் இருவர் மிரட்டும் marburg வைரஸ் வைரஸ் பாதிப்பில் உயிரிழந்திருப்பதாகவும், இதன் பாதிப்பு எபோலா வைரசை போன்று கடுமையாக இருக்கும் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், கானாவில் நடத்தப்பட்ட பரிசோதனையில் இறந்த இருவருக்கும் மார்க்பர்க் வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

இருப்பினும் செனகலில் உள்ள ஆய்வுக்கூடத்தில் சோதனை செய்ய வேண்டியுள்ளது. இவர்களுக்கு வயிற்றுப்போக்கு, காய்ச்சல், குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகள் இருந்தன.

இந்நிலையில் இதன் இறப்பு விகிதம் 24 சதவீதத்தில் இருந்து 88 சதவீதமாக மாறியுள்ளது. இந்த marburg வைரஸ் வவ்வால் போன்ற விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவக்கூடியது.

மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பரவும் தன்மை கொண்டதாக கூறியுள்ளது. இந்நிலையில் marburg வைரசிலிருந்து தப்ப அசைவ உணவுகளை நன்கு வேக வைத்து உண்ண வேண்டும் என்று கானா மக்களுக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website