கொரோனா சிகிச்சை பெறும் நபருக்கு கருப்பு பூஞ்சை
சமீப காலமாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் புதிய வகை கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில், உத்திரபிரதேசத்தில் காசியாபாத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கு கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 55 வயதான நபருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து மாதிரிகளை ஆய்வு செய்ததில் கருப்பு பூஞ்சை பாதிப்பு உறுதியானது.