கோடம்பாக்கம் பாடல்களுக்கு குத்தாட்டம் போட்ட தான்சானியா இளைஞருக்கு கத்தி குத்து

May 4, 2022 at 11:04 am
pc

இன்றைக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் உலகின் மறு கோடியில் இருப்பவர் கூட நமக்கு அருகில் இருப்பதை போன்ற உணர்வைஏற்படுத்தி விடுகின்றன. அந்த அளவுக்கு உலகம் சுருங்கிவிட்டது. நெட்டிசன்கள் பலருக்கும் மிகவும் அறிமுகமான இளைஞர் தான்சானியாநாட்டைச் சேர்ந்த கிளி பவுல். இவரும் இவரது சகோதரியும் கோடம்பாக்கத்தில் வெளியாகும் பாடல்களுக்கு உடனுக்குடனே அப்டேட்டாககுத்தாட்டம் போட்டு டான்ஸ் வீடியோக்களை வெளியிட்டு அசத்தி வருபவர்கள். இதனால் இவர்கள் தமிழகம் மட்டுமின்றி இந்தியநெட்டிசன்களிடமும் மிகுந்த பிரபலமானார்.

இவர்களை தான்சானியாவின் இந்திய தூதரகம் பாராட்டிய படங்களை அந்நாட்டின் இந்திய தூதர் பினயா பிரதான் தனது சமூக வலைத்தளபக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்த சூழலில் சில தினங்களுக்கு முன்பு கிளி பவுலை உள்ளூரை சேர்ந்த சிலர் கத்தியால் குத்தியும் மட்டையால் அடித்தும் தாக்கியுள்ளனர். கிளி பவுல் மருத்துவனையில் சிகிச்சை பெறும் படங்களை பகிர்ந்திருந்தார். அதில் மக்கள் எனனை கீழே தள்ள முயற்சிக்கின்றனர். ஆனால்கடவுள் என்னை முன்னேற்ற விரும்புகிறார். எனக்காக பிரார்த்தியுங்கள் என உருக்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த படங்கள்நெட்டிசன்களால் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அண்மையில் பீஸ்ட் படத்தில் அரபி குத்துக்கு இவர்கள் குத்தாட்டம் போட்டிருந்தனர்என்பது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website