கோடை மழை -மாடியில் துணி எடுக்கச்சென்ற பெண் இடி தாக்கி பலி…

April 23, 2023 at 4:05 pm
pc

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட திருக்காளி மேடு பகுதியைச் சேர்ந்த மோகனி மனைவி இளவரசி(32), இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று காஞ்சிபுரம் பகுதியில் திடீரென்று கோடை மழை வெளுத்து வாங்கியது. அச்சமயத்தில் இளவரசி வீட்டின் மாடியில் காயபோட்ட துணிகளை எடுக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக இடி தாக்கியதில் நிகழ்வு இடத்திலேயே இளவரசி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த தாலுகா போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website