கோலாகலமாக நடந்து முடிந்த அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் திருமணம்!
நடிகர் அசோக் செல்வன் பிரபல நடிகை கீர்த்தி பாண்டியனை செப்டம்பர் மாதம் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் ஏற்கனவே வெளிவந்தது. அதன்படி, இன்று இவர்களுடைய திருமணம் இரு வீட்டார் முன்னிலையில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.
தனது தந்தைக்கும், தங்கையின் கணவருக்கும் வாழ்த்து தெரிவித்து, அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ளார்.
மேலும் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இந்த திருமண ஜோடிக்கு ரசிகர்கள் சமுக வலைதளம் மூலம் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.