சக்கரை குறைபாடு காரணமாக ஏற்படும் பாத எரிச்சல் குணமாக என்ன செய்யணும் தெரியுமா …?
2கி வில்வ இலை பொடியை வெந்நீரில் கலந்து தினமும் காலை மதியம் இரவு என மூன்று வேளை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
ஆவாரம் பூ / பொடி ஐந்து கிராம் அளவு எடுத்து, மூன்று நரம்புகள் நீக்கிய மா இலைகளை போட்டு 400மிலி தண்ணீரில் போட்டு சிறு தீயில் கொதிக்க வைத்து நன்றாக சுண்ட காய்ச்சி 100மிலி ஆனதும் வடிகட்டி இரவு முழுவதும் ஆற வைத்து காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
இதே போல காலையில் செய்து மாலை குடிக்க வேண்டும்…
தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்…
மருதாணி இலையை எலுமிச்சை சாறு கலந்து அரைத்து கால் பாதங்களில் பூச பாத எரிச்சல் குணமாகும்.