சட்டு சட்டுனு முடி உடையுதா. ….அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க பட்டு நின்னுடும்….!!
முடி உடைவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. இதை தடுத்து நிறுத்த என்னமாதிரியான சிகிச்சைகள் உதவும் என்பதை பார்க்கலாம்.
முடி உடைதலுக்கு கூந்தல் வறட்சி, கெமிக்கல்கள் நிறைந்த ஷாம்புகளை பயன்படுத்துதல், பொடுகுத் தொல்லை, உடல் நல பிரச்சனைகள், கூந்தலுக்கு போதிய போஷாக்கு இல்லாமல் இருத்தல் போன்றவை மிக முக்கியமான காரணமாக அமைகிறது. இதை ஈடு செய்ய என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
கூந்தலில் முடி இழைகள்:
நம் தலைமுடி ஒவ்வொன்றும் செதில்களால் ஆனது. முடியின் ஒவ்வொரு இழை யிலும் ஒன்றுடன் ஒன்று செதில்கள் காணப்படுகிறது. இந்த செதில்கள் தான் முடி உடைவதற்கு வழி வகுக்கிறது.
முடி உடைவது என்பது பொதுவாக முடியின் தண்டுகளில் ஏற்படுகிறது. இது உங்கள் தலைமுடியை வறண்டதாகவும், சுருங்கச் செய்தும் மற்றும் பிளவுபடக் கூடியதாகவும் மாற்றுகிறது. எனவே இந்த முடி உடைவதை தடுக்க முடியில் போதிய ஈரப்பதத்தை தக்க வைப்பது அவசியம். அதற்கு உதவும் இயற்கை வழிமுறைகள் குறித்து நாம் பார்க்கலாம்.
முடி உடைவதை தடுக்க வைட்டமின்கள்
வைட்டமின் டி3 ஒவ்வொரு முடியை உருவாக்கும் கரோட்டீன்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. அப்படியே முடி வளர்ச்சிக்கு பயோட்டின் மிகவும் அவசியம். இந்த வைட்டமின்கள் பற்றாக்குறை உங்களுக்கு முடி உதிர்தல் மற்றும் கூந்தல் சம்பந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே இந்த வைட்டமின்கள் அடங்கிய உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
முடி உடைவதை தடுக்க க்ரீன் டீ
க்ரீன் டீ – 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் -1டீஸ்பூன்
பயன்படுத்தும் முறை :
இப்பொழுது க்ரீன் டீ தூளை தேங்காயெண்ணெயுடன் கலக்கி பேஸ்ட்டாக்கி கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை உச்சந்தலை மற்றும் கூந்தலில் தடவி 10 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டும். பிறகு கூந்தலை குளிர்ந்த நீரில் கழுவுங்கள். வாரத்திற்கு ஒரு முறையாவது இதை செய்து வர கூந்தல் உடைவது தடுக்கப்படும்.
வேலை செய்யும் விதம் :
க்ரீன் டீயில் உள்ள கேட்டசின்கள் என்ற ஆன்டி ஆக்ஸிடன்கள் முடி வளர்ச்சியை தூண்டுகிறது. இதில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகிறது. க்ரீன் டீ உச்சந்தலையில் உள்ள தொற்று நோயில் இருந்து உங்களை காப்பாற்ற உதவி செய்யும். இது முடி உதிர்தலை தடுக்கிறது.