சப்பாத்தி கள்ளி ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
சப்பாத்தி கள்ளி என்னும் செடியை நாம் கேள்விப்பட்டிருக்கலாம். சப்பாத்தி போல் வட்ட வடிவத்தில் இருக்கும். இந்தச் செடியில் முட்கள் அதிகமாக காணப்படும் . இது ஒரு வகை கற்றாழை என்றும் அறியப்படுகிறது. இந்த வகை கற்றாழையின் சாறு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது என்று அறியப்படுகிறது.
நிறைய முட்களைக் கொண்டு, காண்பதற்கு முகம் சுளிக்க வைக்கும் இந்த கற்றாழை செடியில் பல்வேறு ஊட்டச்சத்து நன்மைகள் இருப்பதாக விஞ்ஞானிகள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் விளக்கம் கொடுக்கின்றனர். இப்போது இந்த சப்பாத்தி கள்ளி ஜூஸ் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்
சப்பாத்தி கள்ளி ஜூஸின் ஊட்டச்சத்து விபரம்
சப்பாத்தி கள்ளி ஜூஸ் குறைந்த கலோரிகளைக் கொண்டது. இந்த கள்ளிச்செடியில் உள்ள வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் குறித்து இப்போது அறிந்து கொள்வோம்.
- வைட்டமின் சி
- பி வைட்டமின்கள்
- ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள்
- தாவர ஊட்டச்சத்துகள்
- கால்சியம்
- மெக்னீசியம்
- பீட்டா கரோட்டின்
- அமினோ அமிலங்கள் உணவு சார்ந்த கடைகளில் இந்த கற்றாழை சாறு தற்போது விற்கப்படுகிறது. ஆனால் இது மிகவும் விலை உயர்ந்தது. எனவே வீட்டிலேயே சப்பாத்தி கள்ளி ஜூஸ் மிகவும் எளிய முறையில் தயாரிக்கலாம்.
சப்பாத்தி கள்ளி ஜூஸ் செய்முறை:
- சப்பாத்தி கள்ளியை எடுத்துக் கொள்ளவும் . அதன் முட்களை மெதுவாக விலக்கிக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பின்பு சப்பாத்தி கள்ளியை அந்த நீரில் போடவும்.
- 4-5 நிமிடம் உயர் தீயில் கொதிக்க விடவும்.
- பின்பு நீரில் இருந்து சப்பாத்தி கள்ளியை எடுத்து ஆறவிடவும்.
- ஆறியபின், அதன். தோல்பகுதியை நீக்கி சிறுசிறு துண்டுகளாக்கவும்.
- அவற்றுடன் சிறிது எலுமிச்சை, ஆரஞ்சு ஜூஸ், தேங்காய் நீர் ஆகியவற்றை கலந்து மிக்ஸியில் அரைத்து சாறு தயாரிக்கவும். இந்த பழங்களை சேர்ப்பதால் இந்த பானத்தின் சுவை அதிகரிக்கும் .
- பின்பு ஒரு வடிகட்டியில் சாற்றை வடிகட்டி, பின் பருகவும். இப்போது சப்பாத்தி கள்ளி ஜூஸின் நன்மைகளை காணலாம்.