சமைக்கும்போது கருகிவிட்டதா? வேஸ்ட் பண்ணாதீங்க.. இந்த டிப்ஸா பாலோவ் பண்ணுங்க …!!

October 25, 2022 at 2:12 pm
pc

காய்கறிகளின் அரசன் என்று உருளைக்கிழங்கை கூறுவார்கள். அதற்கு ஒரு காரணம் உண்டு. உருளைக்கிழங்கு எந்த ஒரு சுவையையும் வாசனையையும் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையது.

சமையல் என்பதை ஒரு வித கலை தான். அனைவருக்கும் கை வந்து விடாது. ஆனால் என்னதான் சமையல் செய்வதில் வல்லவராக இருந்தாலும் சில நேரங்களில் நமக்கே தெரியாமல் ஏதேனும் குளறுபடிகள் ஏற்படுவதுண்டு. அதிலும் உணவு பொருட்கள் கருகி விடுவது என்பது பொதுவாக ஏற்படும் பிரச்சனையாகும். இதனால் நீங்கள் ஆசையாக சமைத்த உணவை உண்ண முடியாத அளவிற்கு மாறிவிடும். அதை பார்த்தால் சாப்பிடும் எண்ணமே கூட போய்விடும். எனவே உணவுப் பொருட்கள் கருகிவிட்டால் அதில் உள்ள கருகிய வாடையை நீக்கி எப்படி அவற்றை சரி செய்வது என்பதை பற்றி பார்ப்போம்.

கருகிய சமையல் பாத்திரத்தை மாற்றலாம்:

பெரும்பாலும் சமையலில், உணவு பொருட்கள் கருகும் போது முதலில் பாத்திரத்தின் அடிப்பகுதி தான் பாதிப்படையும். கருகிப் போவதை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து விட்டால், பால் அல்லது உணவுப் பொருட்களை வேறு ஏதேனும் நல்ல பாத்திரத்திற்கு மாற்றி மீண்டும் சமைக்க ஆரம்பிக்கலாம்.

கருகிய பகுதியை நீக்கி விடுங்கள்:

இறைச்சி அல்லது காய்கறி அல்லது வேறு ஏதேனும் பொருளை சமைக்கும் போது அதன் ஒரு பகுதி மட்டும் கருகி இருந்தால் அந்த பகுதியை மட்டும் நீக்கிவிட்டு சுவையாக உள்ள பகுதியை மற்றவர்களுக்கு பரிமாறலாம்.

உருளைக்கிழங்கை பயன்படுத்தலாம்:

காய்கறிகளின் அரசன் என்று உருளைக்கிழங்கை கூறுவார்கள். அதற்கு ஒரு காரணம் உண்டு. உருளைக்கிழங்கு எந்த ஒரு சுவையையும் வாசனையையும் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையது. எனவே நீங்கள் சமைத்த உணவு பொருள் ஏதேனும் கருகி விட்டு இருந்தால் அந்த கருகிய வாசனை மற்றும் சுவையை நீக்குவதற்கு உருளைக்கிழங்கை வெட்டி கருகிய உணவின் மேல் மிருதுவாக தேய்க்கலாம். சிறிது நேரம் உருளைக்கிழங்கை அதன் மீது போட்டு வைக்கலாம். பிறகு அந்த உருளைக்கிழங்கை நீக்கிவிட்டு உணவு பொருட்களை மற்றவர்களுக்கு பரிமாறலாம்.

அமிலங்கள் நிறைந்த உணவுப் பொருட்களை பயன்படுத்தலாம்:

பொதுவாகவே சில உணவுப் பொருட்கள் உள்ள அமிலங்கள் கருகிய வாடையை போக்கும் தன்மையுடையவை. உணவானது சிறிதளவு கருகி இருந்தால் அந்த கருகிய சுவை மற்றும் வாசனையை சமன் செய்வதற்கு எலுமிச்சை சாறு, வினிகர், ஒயிட் ஒயின், ரெட் ஒயின் அல்லது தக்காளி ஆகியவற்றையும் பயன்படுத்தலாம். கருகிய உணவு பொருட்களுக்கு ஏற்ப இவற்றை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

கிரீம்களை பயன்படுத்தலாம் :

உணவுப் பொருட்கள் சிறிதளவு கருகி இருந்தால் அதன் மீது ஐஸ்கிரீம், நெய், பால், வெண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்துவதன் மூலம் கருகிய வாடையை போக்கலாம். தொக்கு அல்லது குழம்பு வகைகளுக்கு மட்டுமே இந்த முறையை பயன்படுத்த வேண்டும்.

சாஸை பயன்படுத்தலாம்:

கிரில்லில் சமைக்கப்பட்ட பொருட்கள் கருகிவிட்டால், அதன் மீது கிரேன்பெர்ரி அல்லது கூஸ்பெர்ரி சாஸ்களை பயன்படுத்துவதன் மூலம் கருகிய சுவையை தடுக்கலாம். மேலும் இந்த சாஸ்களை பயன்படுத்துவதன் மூலம் உணவின் சுவை நன்றாகவும் இருக்கும்.

இலவங்கப்பட்டை பயன்படுத்தலாம்:

சமைக்கும் உணவுப்பொருளின் வகைக்கேற்ப இலவங்கப்பட்டை பயன்படுத்தலாம். குழம்பு வகைகள், காரமான அல்லது பால் கலந்து செய்யப்பட்ட உணவுப் பொருட்கல் கருகிவிட்டால் இலவங்கப்பட்டை பயன்படுத்துவதன் மூலம் உணவுப் பொருளை சுவையாக மாற்றலாம்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website