சமையலில் ருசி இல்லையா..? இனி கவலைய விடுங்க.. உங்களுக்கான அட்டகாசமான டிப்ஸ் இதோ …!!

December 24, 2022 at 11:50 am
pc

சமையலில் சுவையும் மனமும் கூட வேண்டுமா? உங்களுக்காக சில குறிப்புகள். முள்ளங்கி இலையை தூக்கி போடாமல் சிறிது எண்ணை விட்டு வதக்கி, மிளகாய் வற்றல், உழுத்தம் பருப்பு, பெருங்காயத்தை வறுத்து சேர்த்து துவையல் அரைத்துப் பாருங்கள். சுவை அசத்தலாக இருக்கும். சத்தும் அதிகம். உடம்புக்கும் நல்லது.

புதினா சட்னிக்கு, பிடி வேர் கடலையும் சேர்த்து செய்தால் ருசி கூடும் சத்தம் நிறைந்தது. பருப்பு, பயறு வேக வைக்கும் போது மண் பாத்திரங்களை பயன்படுத்தினால் வைட்டமின்கள் வீணாகாமல் அப்படியே நமக்கு கிடைக்கும்.

காலையில் செய்த கூட்டு மீந்துவிட்டதா? சிறிது பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்துக் கூட்டைக் கொதிக்க விட்டு இறக்கினால், மாலை டிபனுக்கு குருமா ரெடி. புளிப்பு அதிகம் வேண்டுமானால் எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கொள்ளலாம்.

பருப்பு வகைகளை வேகவைக்கும் போது சிறிதளவு கடலை எண்ணெய் அல்லது பூண்டு போட்டு வேக வைத்தால் பருப்பு சீக்கிரமே வெந்துவிடும். சாம்பார் செய்ய அல்லது வேறு ஏதாவது சமையல் செய்ய துவரம் பருப்பு வேக வைக்கும் போது ஒரு பிடி கொள்ளையும் போட்டு வேக வைத்தால் உடம்புக்கு நல்லது.

மசாலா பொடிக்கு மிளகாயை வறுக்கும்போது அதோடு ஒரு பிடி நிலக்கடலையை சேர்த்துக் கொள்ளுங்கள் நல்ல சுவையுடன் இருக்கும். கூட்டு, பொரியல், குழம்பு வைக்கும் போது அவசியம் சீரகம் போட்டு தாளிக்கவும். குழம்பு வாசனையாக இருப்பதுடன் சாப்பாடு எளிதில் ஜீரணம் ஆகிவிடும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website