சம்மர் சீசனுக்கு புத்துணர்ச்சியூட்ட தர்பூசணி பீட்சா செஞ்சி அசத்துங்க ……!!
சம்மர் சீசன் வந்துவிட்டது, மேலும் சில புத்துணர்ச்சியூட்டும் சம்மர் சீசன் பழங்களை சுவைப்பதற்கான நேரமும் வந்துவிட்டது. இந்த கொழுத்தும் வெயிலை சமாளிக்க அதிகம் தண்ணீர் நிறைந்த பழங்களை சாப்பிடுவது வழக்கம். எப்போதும் ஒரே மாதிரி சாப்பிடாமல், கொஞ்சம் வித்தியாசமாக சாப்பிடுவோமே. தர்பூசணி எல்லோருக்கும் மிகவும் பிடித்த ஒரு பழம். இதை வைத்து ஒரு தர்பூசணி பீட்சா செய்யலாம் வாங்க. இதை 10 நிமிடத்தில் செய்துவிடலாம்.
தேவையான பொருட்கள்:
வாழைப்பழம் – 1
ஸ்ட்ராபெரி – 4
தயிர் – 1/4 கப்
தேன் – 3 ஸ்பூன்
தர்பூசணி – வட்டமாக ஒரு துண்டு
புளூபெர்ரி – 1/4 கப்
புதினா – சிறிதளவு
எலுமிச்சை சாறு – 3 ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பெரிய தர்பூசணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் நடுபகுதியில் ஒரு வட்ட வடிவில் தர்பூசணியை வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை சாறு, தயிர், தேன் மூன்றையும் நன்றாக அடித்து கொள்ளுங்கள்.
தர்பூசணி துண்டை ஒரு தட்டில் வைத்து அதன் மீது இந்த நாம் தயாரித்த கலவையை ஒரு கரண்டி கொண்டு மெதுவாக பரப்பி கொள்ளுங்கள்.
அதன் மேல் நறுக்கி வைத்த புளூபெர்ரி, வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி மூன்றுறையும் தூவி விடவும்.
பின்னர், அதன் மீது புதினாவை தூவி, ஆறு துண்டுகளாக நறுக்கி பரிமாறவும். சத்தான சுவையான தர்பூசணி பீட்சா ரெடி….
புளூபெர்ரி இல்லையென்றால் உங்க வீட்டில் வேறு எந்த பழம் இருந்தாலும் சேர்த்துக் கொள்ளலாம்.