‘சர்வாதிகாரியாக மாறுவேன்.!’ – முதலமைச்சர் எச்சரிக்கை

August 10, 2022 at 4:26 pm
pc

சென்னை கலைவாணர் அரங்கில் போதைப்பொருள் தடுப்பு மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்க அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். போதைப்பொருளை கடத்தலில் ஈடுபடுவோரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். போதைப்பொருள் குறித்து புகாரளிக்க இலவச எண்ணை அறிவிக்க வேண்டும்” என கூறினார். 

மேலும், இதை நான் விளையாட்டாக சொல்லவிலை என கூறிய அவர், நான் சாப்ட்னா முதலமைச்சர் என யாரும் கருத வேண்டாம், நேர்மையானவர்களுக்கு தான் நான் சாப்ட், தவறு செய்பவர்களுக்கு, குறிப்பாக போதைப்பொருள் நடமாட்டத்திற்கு துணை போகிறவர்களுக்கு நான் சர்வாதிகாரியாக மாறுவேன். இதற்கான அதிகாரத்தை நான் எங்கும் தேட வேண்டிய அவசியம் இல்லை. என்டிபிஎஸ் சட்டத்தில் உள்ள 32 பி ஏ பிரிவை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website