சளி, இருமல், தொண்டை வலி போக்கும் இஞ்சி கஷாயம்!! – தயார் செய்வது எப்படி…?

January 31, 2023 at 7:13 am
pc

மாறி மாறி வரும் பருவநிலை காரணமாக வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல், சளி, இருமல், தலை வலி, தொண்டை வலி என ஏதேனும் ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்படிப் பட்ட நிலையில் இந்த இஞ்சிக் கஷாயத்தை வைத்துக் குடிக்கையில் நல்ல நிவாரணம் கிடைக்கும். வீட்டில் எளிதாக கிடைக்கும் இந்த பொருட்களை வைத்தே இஞ்சி காஷாயத்தை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

மல்லி விதை – 1 டீஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
பனங்கற்கண்டு -சுவைக்கு
துளசி இலை -10
கற்பூரவள்ளி இலை – 2

செய்முறை :

இஞ்சியை தோல் நீக்கிக் கொள்ளவும். இலைகளை நீரில் சுத்தம் செய்து கொள்ளவும். அனைத்தையும் ஒன்றாக சேர்த்துச் நன்றாக இடிக்கவும்.
இத்துடன் ஒன்றரை கப் நீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். கொதித்து பாதியாகக் குறைந்ததும் எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவும். இத்துடன் தேவைக்கேற்ப பனங்கற்கண்டு சேர்த்து கலந்து கொள்ளவும்.

குறிப்பு :

இந்த கஷாயத்தை வெது வெதுப்பாக குடிக்கலாம். இது சளி, இருமல், பசியின்மை போன்றவைக்கு நல்ல மருந்து. காலை, மாலை கால் கப் குடிக்கலாம். 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 5 மில்லி கொடுக்கலாம். துளசி மற்றும் ஓம இலை சேர்ப்பதனால் சளிக்கு மிகவும் நல்லது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website