சாதி அடையாள கயிறுகள் அணியக்கூடாது -தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு அலெர்ட்.

சாதி அடையாள கயிறுகள் அணியக்கூடாது என மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பல பள்ளிகளில் சாதி அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையிலான வண்ண கயிறுகளை மாணவர்கள் அணியக்கூடாது என்று அனைத்து பள்ளிகளின் தலைமையாசியர்களுக்கு முதன்மை கல்வி அலுவர்கள் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர்.
சாதி பிரிவினையை தூண்டுவோரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவர்களை எச்சரிக்க வேண்டும் என்றும் முதன்மை கல்வி அலுவலர்கள் அந்த சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.