சாப்பிட்ட பின் டீ குடிப்பதால் வரும் ஆபத்துக்கள்!
பொதுவாக ஒரு சிலர் அதீத டீ, காப்பி, பிரியர்களாக இருப்பார்கள். அப்படியானவர்கள் சாப்பிட்ட பிறகு டீ அல்லது தேநீர் குடிக்கும் பழக்கத்தை அதிகம் கொண்டிருப்பார்கள். இதனை விருப்பத்திற்காக செய்யும் சிலர் இதற்குப் பின்னால் இருக்கும் ஆபத்தைப் பற்றி அறிந்துக் கொள்வதில்லை. ஆனால் இதற்குப் பின்னால் எத்தனை ஆபத்துக்கள் இருக்கிறது என்று தெரியுமா?
உணவு சாப்பிட்ட பிறகு இனிப்பிற்கு ஆசைப்பட்டு தேநீர் குடிப்பார்கள் அப்படி குடிக்கும் போது செரிமான அமைப்பு நேரடியாக பாதித்து பல விளைவுகளை ஏற்படுத்தும்.
உண்ணும் உணவு ஜீரணமாகாமல் இருக்கும் இது வாயு, நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும்.
சாப்பிட்ட பிறகு டீ குடித்தால் செரிமானம் பாதிக்கப்பட்டு வாயுத்தலைவலி ஏற்படும்.
நீங்கள் ஆரோக்கியமான உணவு சாப்பிட்டப்பின் தேநீர் குடித்தால் அது ஊட்டச்சத்தைப் பாதிக்கும்.
நாம் உண்ணும் உணவு கனமாக மாறினால் உணவில் இருக்கும் சத்துக்கள் உடலில் உறிஞ்ச முடியாமல் உணவும் ஜீரணமாகாமல் வாயு மற்றும் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும்.
மதியம் அல்லது இரவு வேளைகளில் சாப்பிட்டவுடன் தேநீர் குடித்தால் இதயநோய் ஏற்படும். மேலும், அடிக்கடி டீ குடித்தால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
இவ்வாறு உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் டீ குடிக்கும் பழக்கத்தை நிறுத்துவது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழி வகுக்கும்.