சார்ஜ் போட்டபடியே பேசிய பெண் செல்போன் வெடித்து மரணம்! எச்சரிக்கை செய்தி

September 28, 2023 at 12:53 pm
pc

தமிழக மாவட்டம் தஞ்சாவூரில் பெண்ணொருவர் சர்ஜிங்கில் இருந்த போன் பேசும்போது வெடித்ததில் உயிரிழந்தார். 

செல்போன் சார்ஜ் 

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியைச் சேர்ந்தவர் கோகிலா (33). கணவர் உயிரிழந்த நிலையில் இவர் கபிஸ்தலத்தில் கைக்கடிகார கடை ஒன்றை நடத்தி வந்தார்.

தனது மகனுடன் வசித்து வந்த கோகிலா, வழக்கம்போல் தனது கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். தனது செல்போனை சார்ஜ் போட்டபடியே அவர் அதில் பேசிக் கொண்டிருந்தார். 

அப்போது திடீரென செல்போன் வெடித்து சிதறியது. இதில் கடை முழுவதும் தீப்பற்றி எறிந்ததால் கோகிலாவின் உடல் முழுவதும் தீப்பிடித்துள்ளது.

பரிதாப மரணம்

இதனால் அலறித் துடித்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார், கோகிலாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. செல்போன் வெடித்து பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website