சிறுநீரகத்தில் உள்ள கற்களை சட்டென கரைக்கும் வாழைத்தண்டு …..!!
சிறுநீரை அடக்கி வைத்தாலோ அல்லது வேறு எதாவது நோய் பாதிப்பாலோ சீறுநீரானது உடலை விட்டு வெளியேறாமல் பலவித பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
சீறுநீரகத்தில் கல் உருவானால் அடி முதுகு பகுதியில் கடுமையான வலி ஏற்படும். அது சில சமயம் அறுவை சிகிச்சை வரை செய்யும் அளவுக்கு சென்று விடுவதும் உண்டு.
வாழைத்தண்டுக்கு சீறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு. வாழைத்தண்டை நாம் உணவில் அடிகடி சேர்த்து கொண்டால் ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாக கரைத்து விடலாம்.
சீறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். நார்ச்சத்து அதிகம் கொண்டது வாழைத்தண்டு. அதிக உடல் எடை கொண்டவர்கள் நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்பு சத்து அதிகம் கொண்டவர்களுக்கு இது கண்கண்ட மருந்து. இது இரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.
வாழைத்தண்டு குளிர்ச்சி தன்மை கொண்டது. உடலை குளிர்ச்சியாக்கும் தன்மை கொண்டது என்பதால் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. வாழைத்தண்டு சீராக கற்களை மட்டும் கரைக்காமல் வயிற்றில் உள்ள புண்களையும் குணமாக்கும் சக்தி கொண்டது.