சிறுவனை தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்த 28 வயது பெண் கைது!

June 17, 2024 at 12:02 pm
pc

தமிழக மாவட்டம் தேனியில் 10 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்ததாக இளம்பெண் கைது செய்யப்பட்டார். தேனி மாவட்டம் போடி அருகே உள்ளது தருமத்துப்பட்டியில் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. ஆதரவற்ற குழந்தைகள் இங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

வரதராஜன் என்பவரின் மனைவி முனீஸ்வரி (28) இந்த காப்பகத்தில் நிர்வாகியாக இருந்துள்ளார். இந்த நிலையில் காப்பகத்தில் இருந்து பாடசாலை சென்று பயின்று வரும் 10 வயது சிறுவன் உடல்நலம் பாதிக்கப்பட்டார்.

அவரிடம் காப்பக ஊழியர் ஒருவர் விசாரித்தபோது, முனீஸ்வரி தன்னை தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்ததாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர் மாவட்ட காப்பக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் புகார் அளித்தார்.

அதன்படி காப்பகத்திற்கு வந்த அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் சிறுவன் பாதிக்கப்பட்டது உறுதியானது. அதனைத் தொடர்ந்து அவர்கள் பொலிசில் அளித்த புகாரின்பேரில் முனீஸ்வரி கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்ஸோ வழக்கு பதியப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website