சில்க் ஸ்மிதாவின் திருமண வாழ்க்கையை நரகமாக்கிய கணவர்!!

September 23, 2022 at 7:06 pm
pc

வசீகரமான பார்வை, கிறங்கடிக்கும் குரல், கவர்ச்சியான தேகம் என 80, 90 ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக இன்றும் வாழ்பவர் சில்க் ஸ்மிதா. ஆந்திரப் பிரதேசம் எலுரு நகரில் பிறந்த இவரின் உண்மையான பெயர் விஜயலட்சுமி. நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவருக்கு திருமண வாழ்க்கையோ நரக வேதனையானது. கணவரும், கணவர் வீட்டாரும் அடித்து துன்புறித்தியதால் வீட்டை விட்டு வெளியேறி, சென்னை வந்த இவர் ஒரு டச்-அப் கலைஞராக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க தொடங்கி ஒரு கட்டத்தில் தென்னிந்தியத் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தார். 

சிலுக்கு என்ற சாராய கடையை நடத்தும் கேரக்டரில் தோன்றி நிரந்தரமாக சிலுக்காக மாறிய அவர், வெறும் 17 வருட சினிமா வாழ்க்கையில், 450 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரம்மிப்பை ஏற்படுத்தினார். தினமும் குறைந்த பட்சம் 3 ஷிப்டுகளில் பணிபுரியும் அளவுக்கு பயங்கர பிசியான இவர் அப்போதே ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆட 50 ஆயிரம் ரூபாய் வரை வசூலித்தாராம். காந்தக் கண்ணழகி, அழகான ராட்சசி என அடுக்கடுக்காய் வர்ணிக்கப்படும் இந்த மனுசியின் மரணம் தான் அவ்வளவு துயரமானது. 

இவரது மரணம் இதுவரை தீர்க்கபடாத மர்மமாகவே திகழ்ந்தாலும் மரணத்திற்கு காரணாமாக கடன், காதல்தோல்வி, மதுப்பழக்கம் என அப்படி இப்படி பேச்சுகள் எழுந்தன.ஒரு நடிகையின் இடத்தை மற்றொரு நடிகையை கொண்டு நிரப்ப முடியும். ஆனால் இந்த மகாநடிகையின் இடம் எதற்கும் ஈடாகாது. ஆம் காலங்கள் பல கடந்தாலும் சில்க் ஸ்மிதா ஒரு காவியம் தான்!

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website