சிவகார்த்திகேயன் வேண்டவே வேண்டாம்:ரஜினிகாந்த் அதிரடி உத்தரவு…
ரஜினியின் ‘அண்ணாத்த’ படம் பலவித நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனையை படைத்தது. ஆனாலும் ரஜினி ரசிகர்களுக்கு இந்தப்படம் பலத்த ஏமாற்றத்தை அளித்தது. இதனை தொடர்ந்து ரஜினியின் அடுத்த பட இயக்குனர்களின் பட்டியலில் பல இளம் இயக்குனர்களின் பெயர்கள் அடிப்பட்டது.
இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக ரஜினியின் ‘தலைவர் 169’ பட அப்டேட் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் தனது 169 ஆவது படத்தில் ரஜினி நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனருடன் ரஜினி இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.
விஜய்யின் ‘பீஸ்ட்’ படம் வெளியாவதற்கு முன்பாகவே ரஜினியை இயக்கும் வாய்ப்பை கைப்பற்றினார் நெல்சன். கடந்த ஏப்ரல் மாதம் வெளியான ‘பீஸ்ட்’ படம் குறித்து பலவிதமான நெகட்டிவ் விமர்சனங்கள் இணையத்தில் குவித்தது. இதனால் ‘தலைவர் 169’ படத்தை இயக்கும் வாய்ப்பு நெல்சன் கையை விட்டு நழுவலாம் என்ற தகவல் வெளியாகி இணையத்தில் பரபரப்பை கிளப்பியது.
இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமீபத்தில் இந்தப்படத்தின் ‘ஜெயிலர்’ என்ற டைட்டிலும் புதிய போஸ்டரும் வெளியானது. இதனையடுத்து தற்போது இந்தப்படத்தின் போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் நெல்சனின் நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் நெல்சன் இந்தப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பது குறித்து ரஜினியிடம் கேட்ட போது, அதற்கு நோ சொல்லிவிட்டாராம். ‘ஜெயிலர்’ ரஜினி படமாகவே இருக்கட்டும் என சிவகார்த்திகேயனிடம் கூறிவிட்டாராம். விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.