சிவாஜி கணேசனின் சொத்து வழக்கு –அதிரடி தீர்ப்பு!
மறைந்த பிரபல நடிகர் சிவாஜி கணேசனுக்கு பிரபு, ராம்குமார் என இரு மகன்களும், சாந்தி, ராஜ்வி என இரு மகள்களும் உள்ளனர். 2001ல் நடிகர் சிவாஜி கணேசன் இறந்த பிறகு சாந்தியும், ராஜ்வியும் தங்களின் ரூ.270 கோடி சொத்தை முறைகேடாக நிர்வகித்ததாகவும், வீட்டு வாடகை தராமல் ஏமாற்றியதாகவும் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்தனர். .
அதில், இந்து வாரிசுரிமை சட்டத்தில் 2005-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தத்தின்படி தந்தை சிவாஜி கணேசனின் சொத்துக்களில் தங்களுக்கும் உரிமை உள்ளது. எனவே, பாகப்பிரிவினை செய்து தர உத்தரவிட வேண்டும். தங்களுக்கு தெரியாமல் தந்தை சொத்துக்களை ராம்குமார், பிரபு விற்றுள்ளனர். அந்த விற்பனை பத்திரங்களை செல்லாது என அறிவிக்க வேண்டும். ஆயிரம் சவரன் தங்க நகைகளையும், 500 கிலோ வெள்ளி பொருட்களையும் பிரபுவும், ராம்குமாரும் அபகரித்துக் கொண்டனர்.
பிரபுவும், ராம்குமாரும் சாந்தி தியேட்டரின் ரூ.8.2 கோடி மதிப்புள்ள பங்குகளை தங்கள் பெயருக்கு மாற்றிக் கொண்டனர். நடிகர் சிவாஜி கணேசன் எழுதியதாக கூறப்படும் உயில் போலியானது. ராம்குமாரும், பிரபுவும் பொது பவர் ஆஃப் அட்டர்னியில் கையெழுத்திட்டு ஏமாற்றினர்.
அதில் கூறியிருப்பதாவது: இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.தியேட்டர் சொத்துகளை விற்க தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மேலும் ஒரு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
சாந்தி தியேட்டர் பிரச்சினைக்கான அனைத்து சம்பிரதாயங்களும் ஏற்கனவே முடிந்துவிட்டதாகவும் நடிகர் பிரபு கூறியுள்ளார். சாந்தி திரையரங்கில் உள்ள அனைத்து பங்குகளும் 2010ல் உரிமையாளர்களை மாற்றிவிட்டதாகவும் தனியார் கட்டுமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இரு தரப்பு விளக்கங்களையும் ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், சிவாஜியின் மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வியின் மனுக்களை தள்ளுபடி செய்தது.