சீரகத்தை அதிகளவு எடுத்து கொள்வதால் கருச்சிதைவு ஏற்படுமாம்!!எச்சரிக்கை …
நாம் அன்றாடம் உணவில் அதிகம் சேர்க்கப்படும் பொருள் தான் சீரகம். இது பசி உணர்வை தூண்டுகிறது.
அதே நேரத்தில் இதை அதிகம் உணவில் சேர்ப்பதால், நமக்கு பாதிப்புகளும் அதிகம் இருக்கின்றன.
அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல சீரகத்தையும் அளவாக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இருப்பினும் சீரகத்தை அதிகம் எடுத்து கொள்வது ஆபத்தையே ஏற்படுத்தும். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.
- சீரகத்தை அளவிற்கு அதிகமாக உட்கொள்வது கல்லீரலை சேதப்படுத்தும். எனவே சீரகத்தை அளவோடு உட்கொள்ள வேண்டும்.
- சீரகத்தை அதிகப்படியாக எடுத்துக் கொள்வதன் காரணமாக, மார்பில் எரிச்சல் உணர்வு ஏற்படலாம். மேலும், சீரகத்தை அதிகமாக உட்கொள்வது ஏப்பம் விடுவதில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
- கர்ப்பிணி பெண்கள் சீரகத்தை அதிக அளவில் எடுத்துக்கொள்வதால் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், பெண்கள் மாதவிடாய் காலங்களில் சீரகத்தை அதிகம் எடுத்துக்கொண்டால் அதிக ரத்தப்போக்கு ஏற்படும். எனவே அந்த சமயங்களில் சீரகத்தை தவிர்ப்பது நல்லது.
அதிக அளவு சீரகத்தை உட்கொள்வதால், உடலில் இரத்த சர்க்கரை அளவு குறைகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது என்றாலும், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பவர்கள் குறைவான அளவு சீரகத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.