சுக்குநூறா உடைந்த பாலம் – 1,717 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விபத்து.

June 5, 2023 at 10:35 am
pc

பிஹார் மாநிலம் பாகல்பூரில் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இன்று மாலை இடிந்து விழுந்துள்ளது. அகுவானி சுல்தான்கஞ்சில் கங்கை பாலம் என இது அறியப்படுகிறது. இதுவரை இந்த பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழப்பு ஏதும் இல்லை என தெரியவந்துள்ளது.

தற்போது சமூக வலைதளங்களில் அந்த மேம்பாலம் இடிந்து விழுந்த காட்சி பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

சுமார் 1,717 கோடி ரூபாய் செலவில் இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்துள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்த பிஹார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் இந்த பாலம் சூறாவளி காற்றில் சேதமடைந்ததாகவும் இந்த பாலத்தின் ஒரு பகுதி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இடிந்து விழுந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website