செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றம்!
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் கீழ் தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். தமிழகத்தின் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டதை தொடர்ந்து அவருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் இருந்து இடைக்கால ஜாமீன் மனு மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றுவது தொடர்பான கோரிக்கை மனு ஆகியவை நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னை உள்ள தனியார் காவேரி மருத்துவமனைக்கு மாற்றுவது தொடர்பான மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி, அமைச்சர் செந்தில் பாலாஜியை அவரது சொந்த செலவில் காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தனர்.
இதையடுத்து தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உயர் சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையின் ஆம்புலன்ஸில் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஓமந்தூரார் மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவர்கள் உடனடியாக அவருக்கான தனிப்பட்ட மருத்துவ கவனிப்புகளை உடனடியாக வழங்க வேண்டும் என கருத்து தெரிவித்து இருந்த நிலையில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.