சென்னையில் நிலநடுக்கம்-அச்சத்தில் அலறியடித்து ஓடிய மக்கள்..

February 22, 2023 at 2:14 pm
pc

சென்னை அண்ணாசாலையில் ஒயிட்ஸ் ரோட்டில் வங்கி மற்றும் 2 கட்டிடங்களில் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதே போல், அண்ணாநகரிலும் சில இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதால் ஊழியர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். அலுவலகங்களில் இருந்து நூற்றுக்கணக்கான ஊழியர்கள் சாலையில் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நில அதிர்வு குறித்து தேசிய மையத்தின் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக எதுவும் பதிவாகவில்லை. நில அதிர்வு ஏற்பட்டதற்கு, தங்களது பணிகள் காரணமில்லை என சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website