சென்னையில் பயங்கரம்! மனைவி கண் முன்னே சரமாரி தாக்குதல்.. பிரபல ரவுடி கொலை

September 6, 2022 at 11:03 am
pc

திருவான்மியூரில் மனைவி கண் முன்னே ரவுடி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இவர் நேற்று மாலை தனது மனைவியுடன் வீட்டின் அருகே உள்ள காவல் குடியிருப்பு பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் இருவர் வந்தாக கூறப்படுகிறது.

ஹெல்மெட் அணிந்து வந்த அந்த மர்ம நபர்கள், ரவுடி ஓலை சரவணனை சரமாரியாக வெட்டி உள்ளனர். மனைவி கண் முன்னே நடந்த இந்த கொடூர சம்பவத்தில் ஓலை சரவணன் அங்கேயே சரிந்து விழுந்தார். 

ஓலை சரவணனை கொலை செய்த அவர்கள், உடனடியாக அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். தனது கணவர் கண் முன்னே படுகொலை செய்யப்பட்டதைப் பார்த்து அதிர்ந்து போன, ஓலை சரவணன் மனைவி இது குறித்து திருவான்மியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார், உடலை கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட ஓலை சரவணன் சமீபத்தில் தான் வழக்கு ஒன்றில் இருந்து சிறை சென்று வெளியில் வந்துள்ளார். இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ள நிலையில், முன் பகை காரணமாக இவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website