வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தற்போது சென்னையில் பல இடங்களில் மீண்டும் பரவலாக மழை பொழிந்து வருகிறது. சென்னையின் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, பட்டினம்பாக்கம், எம்.ஆர்.சி நகர், மயிலாப்பூர், மந்தைவெளி, ராயப்பேட்டை, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் தியாகராய நகர், மேற்கு மாம்பலம், வடபழனி, கோடம்பாக்கம், கேகே நகர் உள்ளிட்ட இடங்களிலும் மழை பொழிந்து வருகிறது.