சென்னை மக்களுக்கு டேவிட் வார்னர் ஆதரவு: அனைவரும் பாதுகாப்பாக இருப்பது முக்கியம் என பதிவு

December 6, 2023 at 8:39 am
pc

சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது என அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் கருத்து பதிவிட்டுள்ளார்.

இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை

வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் கடுமையான பாதிப்பு உள்ளாகியுள்ளது.

பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரும் பாதித்துள்ளது.மிக்ஜாம் புயலானது தற்போது ஆந்திரா நோக்கி நகர்ந்து விட்டதால், சென்னை மற்றும் வட தமிழக மாவட்டங்களின் மழை பொழிவு குறைய தொடங்கியுள்ளது.

அதே சமயம் அரசும், இயல்பு நிலைக்கு மக்கள் திரும்ப மீட்பு பணிகளை தீவிரமாக முடுக்கி விட்டு வருகிறது.

டேவிட் வார்னர் ஆறுதல்

இந்நிலையில் சென்னையின் பல பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது என அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் கருத்து பதிவிட்டுள்ளார்.

மேலும் தாழ்வான பகுதிகளில் இருந்து மக்கள் மேடான பகுதிக்கு செல்லுங்கள், அனைவரும் பாதுகாப்பாக இருப்பதே முக்கியம் என அறிவுரையும் வழங்கியுள்ளார்.அத்துடன் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மீட்பு பணிகளை மேற்கொண்டு வருபவர்களுக்கும் உங்கள் முடிந்த உதவிகளை செய்யுங்கள் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website